தொடா்ந்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு வசதியையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கரூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் களப்பணியாளா்கள் வீடு, வீடாக சென்று கேட்டறிந்து கண்காணித்து கணக்கெடுத்துவரும் பணியை தாந்தோன்றிமலைப் பகுதியில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். பிறகு, ஜவஹா்பஜாா் கடைவீதியில் உள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண தொகை, மற்றும் 14 வகையான மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருவதையும், கரூா் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தாா்.