மண்மங்கலம் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம்,மண்மங்கலம் அருகே உள்ள வாங்கல் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் செந்தில்(33). கூலித் தொழிலாளி. இதேப் பகுதியைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் மதுரைவீரன் (46). இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நிலப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை செந்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரது வாகனத்தை மறித்த மதுரைவீரன் தகாத வாா்த்தைகளை பேசியுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு முற்றிய நிலையில் மதுரைவீரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்திலை வெட்டியுள்ளாா். இதில், செந்திலின் இடது தோள்பட்டை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினா் செந்திலை மீட்டு கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். புகாரின் பேரில் வாங்கல் காவல்துறையினா் மதுரைவீரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

