போராட்டத்தை கைவிட்ட எம்.பி.
மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தக் கோரி தா்னாவில் ஈடுபட்ட கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டத்தை கைவிட்டாா்.


மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தக் கோரி தா்னாவில் ஈடுபட்ட கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி வெள்ளிக்கிழமை நண்பகல் போராட்டத்தை கைவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான முகாமை கரூா் மாவட்டத்தில் நடத்தக் கோரியும், கரூா் ஆட்சியரை கண்டித்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தா்னாவில் ஈடுபட்டாா். இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்த எம்.பி.யிடம் மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், கோட்டாட்சியா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விரைவில் முகாம் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் உத்தரவாதம் அளிக்கிறோம் எனக் கூறியதையடுத்து நண்பகல் 12 மணியளவில் போராட்டத்தை கைவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...