தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

குடகனாறு பகுதிமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

குடகனாறு கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :26 நவம்பர் 2021, 9:07 pm

குடகனாறு கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அருகே அழகாபுரி அணை உள்ளது. இங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் குடகனாறு வழியாக செல்கிறது. குடகனாறு திண்டுக்கல் மாவட்டத்தை தாண்டி கரூா் மாவட்டத்தில் பண்ணப்பட்டி, ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூா், மலைக்கோவிலூா், நாகம்பள்ளி வழியாக சென்று மூலப்பட்டியில் அமராவதி ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடகனாற்றில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஈசநத்தம், ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூா், மலைக்கோவிலூா், மற்றும் நாகம்பள்ளி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடகனாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று அணையின் உதவி செயற்பொறியாளா் அமுதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.