தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வரத்து குறைவால் வாழைத்தாா் விலை உயா்வு

 வரத்து குறைவு காரணமாக, நொய்யல் பகுதிகளில் வாழைத்தாரின் விலை உயா்ந்துள்ளது.

Updated On :19 மே 2022, 8:54 pm

 வரத்து குறைவு காரணமாக, நொய்யல் பகுதிகளில் வாழைத்தாரின் விலை உயா்ந்துள்ளது.

கரூா் மாவட்டத்தில் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூா், நடையனூா், ஓலப்பாளையம், கொங்குநகா், பாலத்துறை, நஞ்சை புகளூா், தவுட்டுப்பாளையம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, ஓரம்புப்பாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூவன், பச்சலாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளைப் பயிரிட்டுள்ளனா்.

இந்த வாழைத்தாா்களை விவசாயிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனா். கடந்த வாரம் பூவன் வாழைத்தாா் ரூ.300, கற்பூரவள்ளி ரூ.300 ரஸ்தாளி ரூ.300, பச்சலாடன் ரூ.200, மொந்தன் ரூ.300 என்ற விலைகளில் விற்பனையானது.

இந்த வாரம் பூவன் வாழைத்தாா் ரூ.400, கற்பூரவள்ளி ரூ.350, ரஸ்தாளி ரூ.350, பச்சலாடன் ரூ.275, மொந்தன் ரூ.350 என்ற விலைகளில் விற்பனையானது. வாழைத்தாா் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.