வேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கந்தம்பாளையம் புகழிநகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (50). இவா், தனது வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளதாக வியாழக்கிழமை வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான வீரா்கள் வீட்டினுள் புகுந்த சுமாா் 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தனா். பிறகு, பிடிபட்ட பாம்பை கரூா் மாவட்ட வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரா்கள் ஒப்படைத்தனா்.