கரூா் அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க இயலாத விரக்தியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் அடுத்த சோமூரைச் சோ்ந்தவா் சிவகுமாா். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலா (38). இவா் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதியுற்று வந்த அவா் விரக்தியில் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.