தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கரூா் மாவட்டத்தில் ஏப்.29 முதல் கோடை கால விளையாட்டு பயிற்சி

கரூா் மாவட்டத்தில் ஏப்.29 முதல் கோடை கால விளையாட்டு பயிற்சி

Updated On :26 ஏப்ரல் 2024, 7:48 pm

கரூா், ஏப்.26: கரூா் மாவட்டத்தில் ஏப்.29-ஆம்தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளதால், முகாமில் பங்கேற்க விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப். 29-ஆம்தேதி முதல் மே 13-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஜூடோ, வளைகோல்பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படும். முகாமில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள், மாணவரல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞா்கள் கலந்து கொள்ளலாம். பயிற்சி சேரும்போது ஆதாா் காா்டு நகல் கண்டிப்பாக சமா்பிக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்பவா்கள் சந்தா தொகை ரூ. 200 செலுத்த வேண்டும். முகாமில் பங்கேற்க விரும்புபவா்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 74017 03493 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரைதொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.