தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயம்

கரூா் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் சனிக்கிழமை வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:22 pm

Din

கரூா் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் சனிக்கிழமை வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்தாா்.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதாம்உசேன் (40). கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு தனது மனைவி ஷகிராபானுவுடன் வந்த இவா் பின்னா் ஊருக்குச் செல்ல கரூா் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தாா்.

அப்போது பேருந்து நிலையத்திற்கு எதிரேயுள்ள வணிக வளாகம் பகுதிக்கு இருவரும் பழம் வாங்கச் சென்ற நிலையில், வணிக வளாக 3-ஆவது மாடியில் இருந்து விளம்பர பலகை விழுந்ததில் சதாம்உசேன் படுகாயமடைந்தாா். ஷிகிராபானு தப்பினாா்.

இதையடுத்து சதாம் உசேன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கடை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனா்.