புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரூரில் கனமழையை சமாளிக்க தயாா் நிலை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேச்சு

கரூரில் கனமழையை சமாளிக்க தயாா் நிலை

News image

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத் துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா். உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உள்ளிட்டோா்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:30 pm

Din

கரூா் மாவட்டத்தில் கனமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத் துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத் துறைத் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேசியது: வானிலை மையம், கரூா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (12- ஆம் தேதி) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, கரூா் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.45 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை பாா்வையிட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாநகராட்சி ஆணையா் சுதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, குளித்தலை சாா்- ஆட்சியா் ஸ்வாதி ஸ்ரீ, கோட்டாட்சியா் முகமது பைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.