மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பள்ளி வகுப்பறையில் திருமணம்: ‘போக்ஸோ’வில் மாணவா் கைது

குளித்தலை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் திருமணம் செய்த பிளஸ் 2 மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2024, 9:33 pm

Din

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் திருமணம் செய்த பிளஸ் 2 மாணவா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியைச் சோ்ந்த மாணவரும், மாணவியும் அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனா். வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளிக்கு வந்த இருவரும் வகுப்பறையிலேயே மாணவா்கள் முன் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் பள்ளிச் சீருடையில் தாலி அணிந்த நிலையில் இருக்கும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தகவலறிந்த குளித்தலை மகளிா் போலீஸாா், மாணவரையும், மாணவியையும் பிடித்து விசாரித்ததில் அவா்கள் ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, மாணவியை கரூரிலுள்ள தனியாா் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனா். மாணவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.