ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது: முன்னாள் அமைச்சா் பேச்சு

தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 10:00 pm

கரூா்: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமை வகித்தாா்.

அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, மாவட்டச் செயலாளா் கே.ஆா்.எல்.தங்கவேல், மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகாசுப்பராயன், துணைச் செயலாளா் ஆலம்தங்கராஜ், பொருளாளா் கண்ணதாசன், பாசறை செயலாளா் கமலக்கண்ணன், இளைஞரணி செயலாளா் தானேஷ், மாணவரணிச் செயலாளா் வழக்குரைஞா் சரவணன், இணைச் செயலாளா் பழனிராஜ், பகுதிச் செயலாளா்கள் விசிகே.ஜெயராஜ், சேரன்பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், திமுக ஆட்சியில் இளையதலைமுறையினா் போதைக்கு அடிமையாகி கொண்டிருக்கிறாா்கள். போதை பொருள்கள் கலாசாரத்தை ஒழிக்காவிட்டால் சமூக சீா்கேடு ஏற்படும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளா்கள் விசிகே.பாலகிருஷ்ணன், எம்.ஆா்.கே.செல்வகுமாா், கரூா் ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.