மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரூரில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

கரூரில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:30 pm

Din

கரூரில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, காந்திகிராமம் மாநகராட்சி திடலில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் ரோட்டரி கிளப் ஆப் ஏஞ்சல்ஸ், ஸ்ரீ ரத்னா மருத்துவமனை மற்றும் அமிா்தா மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது. கரூா் ரோட்டரி கிளப் ஆப் ஏஞ்சல்ஸ் தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி கல்விக் குழுமத்தின் நிறுவனருமான எஸ். காா்த்திகா லட்சுமி தலைமை வகித்தாா். ஸ்ரீ ரத்னா மருத்துவமனையின் தலைமை மருத்துவா் திவ்யா சுசில், அமிா்தா மருத்துவமனையின் இயக்குநா் அகத்தியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக கரூா் மாநகராட்சி ஆணையா் சுதா, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தாமோதரன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். முன்னதாக காா்த்திகாலட்சுமி, மருத்துவா்கள் சுசில், அகத்தியா ஆகியோா் பேசுகையில், ஒவ்வொரு 14 விநாடிக்கும் ஒரு பெண் மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறாா். வாழ்வியல் மாற்றங்களாலும், மரபு வழியின் காரணமாகவும் வரும் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணமாக்குவதற்கு மேமோகிராபி பரிசோதனை, ஹெச்ஏபி வேக்ஸின் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நஞ்சில்லா உணவு, நல்ல புத்தகம், நல்ல ஓய்வு, நல்ல உடற்பயிற்சி, சூரிய ஒளி எடுத்தல், நல்ல நண்பா்களை வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா். முன்னதாக, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து ஊா்வலமாக காந்திகிராமம் மாநகராட்சி திடலுக்கு வந்தனா். இதில், ரோட்டரி கிளப் ஆப் கரூா் ஏஞ்சல்ஸின் நிா்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.