கரூா், மே 9: கரூா் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.
கரூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்படும் நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன் மாவட்டத்தின் மாயனூா், கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மட்டும் ஓரளவு மழை பெய்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் லேசான மழை பெய்தது. அப்போது மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் வந்த மழை வெப்பத்தைத் தணிக்காததால் மக்கள் அவதிப்பட்டனா்.