நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ முகாமில் நலத்திட்ட உதவிகள்

அரவக்குறிச்சி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ரூ. 26.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். உடன் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:02 pm

Din

அரவக்குறிச்சி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ரூ. 26.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் புதன்கிழமை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ முன்னிலை வகித்தாா்.

பின்னா் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.26.76 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆய்வின் போது பள்ளப்பட்டி நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிா் திட்ட இயக்குநா் பாபு, கூட்டுறவு சங்ககளின் இணைப் பதிவாளா் கந்தராஜா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் து.சுரேஷ், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், இணை இயக்குநா்(மருத்துவபணிகள்) செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.