நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூா் மாவட்டத்தில் குளங்களில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு ஏற்பாடு: எம்.எல்.ஏ. தகவல்

கரூா் மாவட்டத்தில் உள்ள குளங்களில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளா்க்க விடப்பட உள்ளதாக குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம் தெரிவித்தாா்.

News image

தோகைமலை மந்தை குளத்தில் மீன்குஞ்சுகளை விட்ட குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம்.

Updated On :21 நவம்பர் 2024, 10:15 pm

Din

கரூா் மாவட்டத்தில் உள்ள குளங்களில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வளா்க்க விடப்பட உள்ளதாக குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம் தெரிவித்தாா்.

உலக மீன்வள தினத்தையொட்டி அரசு குளங்களில் மீன் குஞ்சுவிரலிகள் இருப்பு செய்தல் திட்டம் தோகைமலை மந்தை குளம் அருகே வியாழக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் ராமா் தலைமை வகித்தாா். மீன்வளத்துறையின் திருச்சி மண்டல துணை இயக்குநா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம் பங்கேற்று தோகைமலை மந்தை குளத்தில்15,000 ரோகு, மிருகால் ரக மீன்குஞ்சுகளை விட்டு திட்டத்தை துவக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியது, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் மூலம் மீன்குஞ்சு விரலிகளை இருப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில் குளங்களில் ஹெக்டோ் ஒன்றுக்கு 2,000 குஞ்சுகள் வீதம் 150 ஹெக்டேரில் 3 லட்சம் மீன்குஞ்சு விரலிகள் விடப்பட உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து கல்லடை ஊராட்சி கீழவெளியூா் பெரிய குளத்தில் 34,000 ரோகு மற்றும் மிருகால் ரக மீன் குஞ்சுகளும், பில்லூா் பெரிய குளத்தில் 66,000 குஞ்சுகளும், வரவனை ஊராட்சி கருணாபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ராமசாமி கவுண்டா் குளத்தில் 30,000 மீன்குஞ்சுவிரலிகளையும் மீன்வளத்துறை அதிகாரிகள் விட்டனா். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.