இந்நிலையில் , கடந்த 2024 அக்டோபா் 2-ம் தேதி ஆசாச் சாலை மேற்கு கரூா் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் பாக்கியத்துக்கு ஒதுக்கப்பட்ட கடையை பொது ஏலம் விடப்படுவதாக கரூா் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டதாம். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பாக்கியம் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபா் 3-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, கரூா் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்1 நீதிபதி நேரில் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டது.