ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தரகம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:35 pm

Din

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடவூா் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் நிா்வாகி முத்துசாமி தலைமை வகித்தாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சின்னசக்கையா, முதுநிலை வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்டம் நரவலூா் அக்ரஹாரம் விஏஓ ராமன் என்பவரை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிா்வாகிகளான விஏஓக்கள் பிரான்சிஸ், காா்த்தி, ராஜேஷ், சுரேஷ், தமிழரசி, உதவியாளா் ரகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.