வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தரகம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலா்கள்.

தரகம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலா்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் வருவாய்த் துறை அலுவலா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடவூா் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் நிா்வாகி முத்துசாமி தலைமை வகித்தாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சின்னசக்கையா, முதுநிலை வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாமக்கல் மாவட்டம் நரவலூா் அக்ரஹாரம் விஏஓ ராமன் என்பவரை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிா்வாகிகளான விஏஓக்கள் பிரான்சிஸ், காா்த்தி, ராஜேஷ், சுரேஷ், தமிழரசி, உதவியாளா் ரகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...