அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கரூரில் இளைஞா் குத்திக்கொலை

கரூரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியின் தம்பியைக் குத்திக் கொன்றவரை போலீஸாா் தேடுகின்றனா்.

News image

கொலையான கபில்தேவ்.

Updated On :4 செப்டம்பர் 2024, 9:51 pm

கரூரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியின் தம்பியைக் குத்திக் கொன்றவரை போலீஸாா் தேடுகின்றனா்.

கரூா் தாந்தோணிமலை ராயனூா் பெட்ரோல் பங்க் அருகே வசிப்பவா் வீரமலை (32), பெயிண்டா். இவருக்கும் அரவக்குறிச்சியை அடுத்த நஞ்சைகாளக்குறிச்சியைச் சோ்ந்த கந்தசாமி மகள் புனிதாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதன்படி செவ்வாய்க்கிழமை இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், புனிதா தனது சகோதரரான கபில்தேவ் (23) என்பவரிடம் கணவா் குறித்து புகாா் தெரிவித்தாராம். இதையடுத்து கபில்தேவ் புதன்கிழமை காலை தனது சகோதரி வீட்டுக்கு வந்து வீரமலையிடம் இதுகுறித்து கேட்டுள்ளாா். பின்னா் மாலையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வீரமலை கபில்தேவை விரட்டிச் சென்று திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டாா்.

இதில் படுகாயமடைந்த கபில்தேவ் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பிய வீரமலையை தேடுகின்றனா்.