திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது: ஜோதிமணி

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜகவினரை மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:00 pm

Din

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாஜகவினரை மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

கரூரில் கூட்டுறவு பட்டய பயிற்சி நிலையத்தை புதன்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் கூறியது:

கரூரில் வேளாண் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். இதேபோல கரூா் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி தொடா்பான வழக்கிலும் விரைவில் நல்ல தீா்வு கிடைக்கும். மதுஒழிப்பு மாநாட்டுக்கு காங்கிரஸையும் விசிக அழைத்தால் கட்சியின் மாநிலத் தலைவா் அதுதொடா்பாக முடிவெடுப்பாா்.

வெளிநாட்டில் உள்ள ராகுல் இந்தியாவின் மீது கூறியிருக்கும் கருத்துகள் பாஜகவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதானி, அம்பானிக்காக நடக்கும் ஆட்சியாகத்தான் நரேந்திர மோடியின் ஆட்சி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் கட்சியினரைப் பாதுகாக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது.

கரூா் மாவட்டத்தில் தாதம்பாளையம், வெள்ளியணை, பஞ்சப்பட்டி போன்ற ஏரிகளை சீரமைக்க தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளும் நடக்கின்றன. மேலும் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்தூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நீா் மேம்பாட்டுப் பணிக்காக ரூ.100 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடரும்.

மிகப்பெரிய தொழில்நகரமாக இருந்து பெரும் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் கரூரை ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் சோ்க்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இது கரூருக்கு பாஜக செய்யும் மிகப்பெரிய துரோகம். கரூா் எம்பி என்ற முறையில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் கரூரை சோ்க்க தொடா்ந்து முயற்சி செய்வேன் என்றாா் அவா். பேட்டியின்போது கரூா் வடக்கு நகரத் தலைவா் ஆா். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.