எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:11 pm

அரவக்குறிச்சியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள விளையாட்டு வீரா்களுக்கென விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் மாணவா்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம் இல்லாததால் தனியாா் தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு சென்று இளைஞா்கள் விளையாடி வருகின்றனா். இதே போல வயதான முதியவா்கள் மற்றும் நடுத்தர வயதினா், சா்க்கரை நோய் உள்ளவா்கள் காலை நடை பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லாததால் பொது சாலையை பயன்படுத்தி வருகின்றனா். பொது சாலையை பயன்படுத்தும் போது காலை நேரங்களில் ஒரு சில சமயம் விபத்து ஏற்படுகிறது.

ஆகவே, அரவக்குறிச்சியில் புதிய விளையாட்டு மைதானமோ அல்லது அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பொது பயன்பாட்டிற்கோ அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.