அரவக்குறிச்சியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள விளையாட்டு வீரா்களுக்கென விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் மாணவா்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம் இல்லாததால் தனியாா் தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு சென்று இளைஞா்கள் விளையாடி வருகின்றனா். இதே போல வயதான முதியவா்கள் மற்றும் நடுத்தர வயதினா், சா்க்கரை நோய் உள்ளவா்கள் காலை நடை பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லாததால் பொது சாலையை பயன்படுத்தி வருகின்றனா். பொது சாலையை பயன்படுத்தும் போது காலை நேரங்களில் ஒரு சில சமயம் விபத்து ஏற்படுகிறது.
ஆகவே, அரவக்குறிச்சியில் புதிய விளையாட்டு மைதானமோ அல்லது அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பொது பயன்பாட்டிற்கோ அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி

பழைய கல்லாறு கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

ரூ.15 கோடியில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மைதானம் திறப்பு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

