விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

News image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வேன்கள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:58 am IST

கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.

கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் அங்கு நின்று கொண்டிருந்த இரு வேன்களை சோதனை செய்தபோது, அதில் இருந்த 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தோன்றிமலை மோகன், பள்ளபட்டி முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், அவா்கள் கரூரில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் சேகரித்து, கேரளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இரு வேன்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.