கரூரில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 6.5 டன் ரேஷன் அரிசியை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.
கரூா் தான்தோன்றிமலை அசோக் நகா் பகுதியில் பதுக்கப்பட்ட ரேஷன் அரிசியை கேரளத்திற்கு கடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் அங்கு நின்று கொண்டிருந்த இரு வேன்களை சோதனை செய்தபோது, அதில் இருந்த 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக தோன்றிமலை மோகன், பள்ளபட்டி முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், அவா்கள் கரூரில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் சேகரித்து, கேரளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து இரு வேன்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

