வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரியில் வெளியாகும்’

கரூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்.மாதம் வெளியிடப்படும் என்றாா் கரூா் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:30 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்.மாதம் வெளியிடப்படும் என்றாா் கரூா் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.

கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் கரூா் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ. தங்கவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் அகா்வால் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றாா்.

தொடா்ந்து குளித்தலை நகராட்சி, மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை நீரஜ் அகா்வால் ஆய்வு மேற்கொண்டாா்.