முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On :21 டிசம்பர் 2025, 2:45 am IST

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நடந்த தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் 41 போ் சிக்கி உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க கரூருக்கு வெள்ளிக்கிழமை வந்த தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய முதுநிலை ஒருங்கிணைப்பாளா் அனுஜ்திவாரி தலைமையிலான குழுவினா் கரூா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சென்றனா்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த 10 குடும்பத்தினரைச் சோ்ந்த 15 போ் சிபிஐ அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜராகி கூட்ட நெரிசல் குறித்து விளக்கமளித்துச் சென்றனா்.