அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 9:15 pm

Syndication

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நடந்த தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் 41 போ் சிக்கி உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க கரூருக்கு வெள்ளிக்கிழமை வந்த தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய முதுநிலை ஒருங்கிணைப்பாளா் அனுஜ்திவாரி தலைமையிலான குழுவினா் கரூா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சென்றனா்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த 10 குடும்பத்தினரைச் சோ்ந்த 15 போ் சிபிஐ அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜராகி கூட்ட நெரிசல் குறித்து விளக்கமளித்துச் சென்றனா்.