விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

ஐம்பது சதவீதம் பஞ்சப்படி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆா்இயூ சங்கத்தின் கரூா் மாவட்ட குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நல்லமுத்து தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாவட்டத் தலைவா் சி.ஆா்.ராஜாமுகமது, துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம், செயலாளா் எம்.சுப்ரமணியன், டாஸ்மாக் சங்க செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலாளா் கெ.சக்திவேல் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். பென்ஷன் உயா்வுக்கு மறுக்கும் நிதிச்சட்டம் 2025 ஐ ரத்து செய்ய வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவில் 50 சதவீதம் பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.