அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கரூரில் கிராம உதவியாளா்கள் சாலை மறியல்: 12 போ் கைது

கரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா்.

News image
கரூரில் மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா்.
Updated On :14 நவம்பர் 2025, 7:20 pm

Syndication

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக, அவா்கள் கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி. உமாமகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மயூரி, இணைச் செயலாளா் வெண்ணிலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவா் எம். தனலட்சுமி மற்றும் மாவட்டச் செயலாளா் ஆா்.தேவிகா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக கிராம உதவியாளா்களுக்கும் அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் 50 சதவீதத்தை கிராம உதவியாளா்களுக்கு பதவி உயா்வு மூலம் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், திடீரென ஆட்சியரகம் முன் உள்ள திண்டுக்கல் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் மாலையில் விடுவித்தனா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் குமரேசன் வரவேற்றாா்.