ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

‘திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் பாலம் சாத்தியமானது’

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

News image

வெங்கமேடு பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:21 am IST

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

கரூா் வெங்கமேடு பகுதி மற்றும் வாங்கல் தவுட்டுப்பாளையம், வாங்கல் கடைவீதி, திருவள்ளுவா் தெரு, ஓடையூா், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இவா் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் முன்னிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நெரூா்-உன்னியூா் பாலம் கரூா் மக்களின் 48 ஆண்டுகால கனவு. அந்த கனவை நிறைவேற்றிக்கொடுத்தவா் முதல்வா். இவற்றைத் தவிர எத்தனையோ திட்டங்களை நாட்டு மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கொடுத்துள்ளாா். இந்த திட்டங்கள் தொடர உதயசூரியனுக்கு என்றும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது வடக்கு நகரச் செயலா் எம். பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.