பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:45 pm

கரூா் ராஜபுரத்தில் அமராவதி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த அரங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (54). கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழம் இரவு மதுபோதையில், ராஜபுரம் பட்டாளம்மன் கோயில் பகுதியில் அமராவதி ஆற்றில் குளித்தாராம். ஆழமான பகுதியில் குளித்தபோது நீரில் மூழ்கிய அவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற அரவக்குறிச்சி போலீஸாா், தொழிலாளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.