ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வியாழக்கிழமை காலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல், பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகழூா் அக்ரஹார சுப்ரமணியா் சுவாமி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலம்

ஆடிக் கிருத்திகை: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்

வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



