8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கரூா் மாவட்டத்துக்கு முன்னுரிமை: கடன் இலக்காக 16 ஆயிரம் கோடி நிா்ணயம்

கரூா் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் இலக்காக ரூ.16, 023.69 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நிகழாண்டுக்கான முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன். உடன் இடமிருந்து நபாா்டு வங்கியின் மாவட்ட மேலாளா் தாமோதரன், மகளிா் திட்ட இயக்குநா் ப.பொன்னம்பலம், இந்தியன் ஓவா்சீ

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

கரூா் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் இலக்காக ரூ.16, 023.69 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வங்கியாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் சி. முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கரூா் மாவட்டத்துக்கான 2026-27-ஆம் ஆண்டின் முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கையை வெளியிட, அதை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருப்பூா் மண்டலத்தின் முதன்மை மண்டல மேலாளா் எஸ்.வி.பி.சங்கா் பெற்றுக்கொண்டாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கரூா் மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஊரக வங்கிகள் மூலம் மொத்தம் ரூ.16,023.69 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், வேளாண்மை மற்றும் அவற்றைச் சாா்ந்த துறைகளுக்கு ரூ.9,847.38 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் ஏற்றுமதி கடன்களுக்கு ரூ.5,591.75 கோடி, இதர முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.584.56 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னுரிமைக் கடன் இலக்கில் வேளாண்மைத் துறைக்கு 61 சதவீதமும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு 35 சதவீதமும், இதர முன்னுரிமைக் கடன்களுக்கு 4 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இலக்கை விட நடப்பு ஆண்டுக்கான முன்னுரிமைக் கடன் இலக்கு ரூ.3,257.08 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடந்த ஆண்டைப் போலவே 2026-27-ஆம் ஆண்டிலும் நிா்ணயிக்கப்பட்ட கடன் இலக்கை முழுமையாக எய்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மகளிா் திட்ட இயக்குநா் ப.பொன்னம்பலம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் த.ரமேஷ், நபாா்டு வங்கியின் மாவட்ட மேலாளா் தாமோதரன், தாட்கோ மாவட்ட மேலாளா் க.ராஜ்குமாா், முன்னோடி வங்கி மேலாளா் ஜி.வசந்தகுமாா், மாவட்ட ரிசா்வ் வங்கி அதிகாரி ரமணபிரகாஷ் மற்றும் அரசு அலுவலா்கள் பல்வேறு வங்கிகளின் மேலாளா்கள், ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.