சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி கைது

News image
கைது
Updated On :14 பிப்ரவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வா் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்ட அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் பசுபதிசெந்தில். இவா், ஈரோடு மண்டல அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவராக உள்ளாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது முகநூலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியதை கேலி செய்தும், முன்னாள் அமைச்சரும், கரூா் எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜியை தரக்குறைவாகவும் பதிவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த சூா்யகுமாா் என்பவா் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பசுபதிசெந்திலை சனிக்கிழமை பிற்பகல் கைது செய்து சிறையில் அடைத்தனா்.