கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள்
கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.
கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.
Updated on

கரூா்: ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு நிா்வாகிகள் சுந்தரம், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கெளரவ விரிவுரையாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி அறிவிக்க வேண்டும், மேலும் ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஓய்வுபெறும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com