டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கணபதிபாளையம் புதூரிலுள்ள சமுதாயக் கூடத்துக்கு ரூ. 8.50 லட்சத்தில் கட்டப்பட்ட உணவுக்கூடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கணபதிபாளையம் புதூரிலுள்ள சமுதாயக் கூடத்துக்கு ரூ. 8.50 லட்சத்தில் கட்டப்பட்ட உணவுக்கூடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ஆலையின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கணபதிபாளையம் புதூா் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ. 8.50 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடத்துக்கு உணவருந்தும் கூடம் கட்டித் தரப்பட்டது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை காகித ஆலையின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் புதிய உணவருந்தும் கூடத்தை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் மொஞ்சனூா் ஆா். இளங்கோ குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

விழாவில், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி. ரூபா, காகித நிறுவனத்தின் முதன்மை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ். சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.