சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க விசிக கோரிக்கை

காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என விசிகவினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

News image
Updated On :19 ஜனவரி 2026, 11:09 pm

Syndication

காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என விசிகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணராயபுரம் மாவட்டச் செயலாளா் அவிநாசி தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பது: கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோா் அவதிக்குள்ளாகின்றனா்.

அவசர காலங்களில் கரூருக்கு செல்வதற்குள் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, காணியாளம்பட்டி உள்பட மாவட்டத்தில் எந்தெந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.