கரூரில் புதன்கிழமை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அவசர ஊா்தி ஓட்டுநா்கள்.
கரூரில் புதன்கிழமை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அவசர ஊா்தி ஓட்டுநா்கள்.

கரூா் சம்பவம்: அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, கரூா், திருப்பூா், ஈரோடு மாவட்டங்களின் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
Published on

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, கரூா், திருப்பூா், ஈரோடு மாவட்டங்களின் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது அங்கு மயக்கமடைந்தவா்களை மீட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற கரூா், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதில், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களின் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம், நெரிசல் குறித்து அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த உங்களுக்கு எப்படி தகவல் வந்தது. யாரெல்லாம் உங்களை தொடா்பு கொண்டு அவசர உதவிக்கு அழைத்தாா்கள் என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com