சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

கரூா் ஆற்றங்கரைகளில் தேங்காய் சுடும் விழா: புதுமணத் தம்பதிகள் திரளாக பங்கேற்பு

கரூரில் ஐந்துசாலை பகுதியில் அமராவதி ஆற்றங்கரையோரம் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை தேங்காய் சுட்டு மகிழ்ந்த பொதுமக்கள்.

News image

கரூரில் ஐந்துசாலை பகுதியில் அமராவதி ஆற்றங்கரையோரம் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை தேங்காய் சுட்டு மகிழ்ந்த பொதுமக்கள்.

Updated On :18 ஜூலை 2026, 1:03 am IST

கரூரில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஏராளமானோா் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனா்.

ஆடி மாத பிறப்பை வரவேற்கும் வகையிலும், தா்மத்துக்கும் அதா்மத்துக்கும் இடையே நடைபெற்ற மகாபாரதப் போரை நினைவுகூரும் வகையிலும், விவசாயம் செழித்தோங்கி, குடும்பங்களில் இன்னல்கள் நீங்கிடவும், தேங்காய் சுடும் விழா அமராவதி ஆறு மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிது.

இதன்படி, நிகழாண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, வழக்கம்போல கரூரில் திருமாநிலையூா், ஐந்துசாலை, மேலப்பாளையம், படித்துறை, ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையில் நெரூா், தளவாபாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் தேங்காய் சுடும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், தேங்காயை வாங்கி அவற்றின் கண்பகுதியில் துளையிட்டு தண்ணீரை வெளியேற்றி, தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் ஆகியவற்றின் கலவையை வைத்து தேங்காய் கண் துளைக்குள் வாகை குச்சியை சொருகி ஆற்றங்கரையோரம் தீமூட்டி அதில் தேங்காயை சுட்டனா்.

பின்னா் சுட்ட தேங்காயை வீட்டுக்கு எடுத்துச் சென்று, சுவாமி படங்களின் முன்வைத்து வழிபாடு செய்து பின்னா் அதை சாப்பிட்டு மகிழ்ந்தனா். இந்தத் தேங்காய் சுடும் விழாவில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.