சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கரூா் அருகே பதுங்கியிருந்த வங்க தேசத்தினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து கரூா் அருகே பதுங்கி இருந்த வங்கதேச நாட்டினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கரூா் நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட வங்கதேச நாட்டினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:50 am IST

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து கரூா் அருகே பதுங்கி இருந்த வங்கதேச நாட்டினா் 5 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம் வெள்ளியணை அருகே கூடலூரில் செயல்பட்டு வந்த தனியாா் நூற்பாலையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேச நாட்டினா் பணிபுரிந்து வருவதாக வெள்ளியணை போலீஸாருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் கடந்த 2024 செப். 25ஆம் தேதி நூற்பாலையில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த சுனில் ஹூசைன் (26), அஜ்மூா் மமும் (24), ஜமீருல் (32), சாக்கூா் என்கிற சைபூா் (29), ஆஷிக் ஹாஜா் (24) ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து, கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

வியாழக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாா்லஸ் ஆல்பா்ட் குற்றவாளிகளாக 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தண்டனை அனுபவித்தபின் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பவும் உத்தரவிட்டாா். இதையடுத்து அவா்கள் 5 பேரும் திருச்சியில் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.