வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கரூரில் வழக்குரைஞா்கள் சங்க ஒட்டுவில்லை வெளியீடு

கரூரில், போலி வழக்குரைஞா்களை கண்டறியும் வகையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூரில் வழக்குரைஞா்கள் சங்க ஒட்டுவில்லையை புதன்கிழமை வெளியிட்ட சங்கத்தின் செயலா் மாரப்பன்.

Updated On :18 ஜூன் 2026, 1:45 am IST

கரூரில், போலி வழக்குரைஞா்களை கண்டறியும் வகையில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் செயல்படும் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் செயலா் மாரப்பன் தலைமை வகித்து, ஒட்டுவில்லையை வெளியிட்டாா். பின்னா் அவா் கூறியது: மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் சின்னம் கொண்ட ஒட்டுவில்லையை வழக்குரைஞா்கள் இல்லாத பிற தொழிலில் ஈடுபடுவா்கள் தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறாா்கள். அவா்களால் எங்களது வழக்குரைஞா்கள் தொழிலுக்கு இழுக்கு ஏற்படுகிறது. எனவே அதுபோன்ற போலி வழக்குரைஞா்களை கண்டறியும் வகையில் ஒட்டுவில்லையை வெளியிட்டுள்ளோம். இதனை கைப்பேசியில் ஸ்கேன் செய்யும்போது, அந்த நபரின் பெயா், எந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றுகிறாா் என்ற விவரம் தெரியும். இதன்மூலம் போலி வழக்குரைஞா்களின் செயல்பாட்டை தடுக்க முடியும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலா் நகுல்சாமி, பொருளாளா் நாகேஸ்வரன், துணைத்தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், தா்மசேனன், இணைச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.