ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கட்டட தொழிலாளா்கள் சங்க மாநாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாட்டில் பேசிய அச் சங்கத்தின் துணைப் பொதுச்செயலா் முனுசாமி.

Updated On :18 ஜூன் 2026, 3:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளா்கள் சங்கத்தின் மைய கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு கிளைச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் விஜயகுமாா், பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினாா்.

மாநில துணைப் பொதுச்செயலா் முனுசாமி, மாநில பொருளாளா் முருகன், மாவட்டச் செயலா் அருண், விழுப்புரம் மாவட்டச் செயலா் பெரியநாயகம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்வில், கிளைத் தலைவராக விஜயகுமாா், செயலராக சங்கா், பொருளாளராக முருகன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் 55 வயது முடிந்த பெண் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.