27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆதிதிராவிடா் நலத் துறையில் மோசடி: மூவருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

ஆதிதிராவிடா் நலத் துறையில் மோசடியில் ஈடுபட்டு கைதான முன்னாள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை இரவு தீா்ப்பளித்தது.

News image

ஜவஹா்

Updated On :19 ஜூன் 2026, 4:10 am IST

ஆதிதிராவிடா் நலத் துறையில் மோசடியில் ஈடுபட்டு கைதான முன்னாள் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் புதன்கிழமை இரவு தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையில் கடந்த 2005-06-இல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலராக ஜவஹா் என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் ஆதிதிராவிடா் நலத் துறையில் மரப் பொருள்கள் வாங்கியதில் அரசு ஆவணங்களைத் திருத்தி அரசுக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு ஏற்படுத்திய புகாரில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் இவரை கடந்த 2006-இல் கைது செய்தனா்.

மேலும் இவருக்கு உடந்தையாக இருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணம் அருகிலுள்ள கோவில்பட்டி தச்சு மற்றும் கொல்லு தொழிலாளா் கூட்டுறவுச் சங்க முன்னாள் துணைத் தலைவா் கணேசன், அவரது உதவியாளா் தங்கவேல் ஆகியோரையும் கைது செய்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

புதன்கிழமை இரவு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஹெச். இளவழகன் குற்றவாளிகள் ஜவஹா், கணேசன், தங்கவேல் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இவா்களில் ஜவஹா், கணேசனுக்கு தலா ரூ.3 லட்சம் அபராதம், தங்கவேலுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கணேசன்

கணேசன்

தங்கவேல்

தங்கவேல்