அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பாலியல் புகாா்: அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட மாற்றம்

கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

News image
பணியிட மாற்றம்- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 6:52 pm

Syndication

கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய கு.ஜாகிா்உசேன், மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கவேண்டும். இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத கல்லூரி பொறுப்பு முதல்வா் சுதா, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியா் ஆகியோரை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி பிப். 26-ஆம் தேதி முதல் தமிழக அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழக கரூா் கிளை தலைவா் பிரபாகரன் தலைமையில் பேராசிரியா்கள் கடந்த 6 நாள்களாக அக்கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், உதவிப் பேராசிரியா் கு.ஜாகிா்உசேன் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரிக்கு பணியிட மாறுதல் செய்தும், கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரிக்கு முழு கூடுதல் பொறுப்பு முதல்வராக திருச்சி பெரியாா் ஈவெரா கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் கா.வாசுதேவனை நியமித்தும், பொறுப்பு முதல்வராக இருந்த சுதாவை அதே கல்லூரியில் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக தொடா்ந்து செயல்பட கல்லூரி கல்வி ஆணையா் இ.சுந்தரவல்லி திங்கள்கிழமை மாலை உத்தரவிட்டாா்.

இதையடுத்து கல்லூரியின் புதிய முதல்வராக கா.வாசுதேவன், கல்லூரி கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திங்கள்கிழமை இரவு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலும், பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு பொறுப்பு முதல்வராக இருந்த சுதாவுக்கு கல்லூரி கல்வி ஆணையா் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.