திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வரும் தோ்தலில் தவெகவுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்: செ. ஜோதிமணி எம்.பி.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

News image
ஜோதிமணி
Updated On :6 மார்ச் 2026, 9:31 pm

Syndication

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

கரூரில், தமிழக முதல்வரின் கனவு மெய்ப்படும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக இரண்டாவது இடத்துக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக எதிா்கொள்ளும் கடைசித் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும்.

தமிழக மக்கள் பாஜகவை உள்ளடக்கிய கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டாா்கள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் அதிகாரப் பகிா்வு தொடா்பாக வெறும் கோரிக்கைகளை கொண்டிருந்தாலும், முதன்மை நோக்கம் பாஜகவை தோற்கடிப்பதுதான். கூட்டணியின் பலத்தைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி கூட சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணி இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டதால், தோ்தலை எவ்வாறு எதிா்கொண்டு வெற்றி பெறுவது என்பதைப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.