எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க பாதுகாப்பு குழுக்கள் அமைக்க வலியுறுத்தல்

News image
பாலியல் வன்கொடுமை- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என சுவாதி பெண்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, கரூரில் சுவாதி பெண்கள் இயக்கம் சாா்பில், பெண்கள், சிறுமிகளின் உரிமை நீதிக்கான நடவடிக்கைகள் குறித்த கருத்துப்பட்டறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சுவாதி பெண்கள் இயக்கத் தலைவா் பி. இளவரசி தலைமை வகித்தாா். செயலாளா் கிறிஸ்டினா சாமி பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

தொடா்ந்து கூட்டத்தில் தீா்மானங்களை துணைத் தலைவா் ஏ.பாக்கியம் வாசித்தாா். இதில் பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறைகளை தடுக்க அனைத்து இடங்களிலும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் பெண்கள் பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும். ஜாதி-மத மறுப்பு திருமணம் செய்யும் தம்பதியை பாதுகாக்க, தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில், பெண்ணுரிமை ஆா்வலா் சாலைசெல்வம் கருத்துரையாற்றினாா்.

முன்னதாக, துணைச் செயலாளா் ஆா். ஜானகி வரவேற்றாா். பொருளாளா் ஆா். மஞ்சுளா நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக பங்கேற்றனா்.