திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

‘காவிரி, அமராவதி உபரிநீரை ஏரிகளில் சேமிக்கும் திட்டத்துக்கு மதிப்பீடு தயாரிக்கும் பணி தீவிரம்’

News image

செந்தில்பாலாஜி எம்எல்ஏ - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 7:19 pm

காவிரி, அமராவதி ஆறுகளின் உபரிநீரை ஏரிகளில் சேமிக்கும் திட்டத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளகவுண்டன்பட்டியில் நுண்நீரேற்று பாசன திட்டத்தின் கீழ் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கட்டளை காவிரி ஆற்றிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீா் நீரேற்று நிலையத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதித்த தமிழக முதல்வருக்கும், திட்டத்தை நிறைவேற்ற முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்ட கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு பாராட்டு விழா வெள்ளகவுண்டன்பட்டி நுண்நீரேற்று பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் கரூா் சுக்காலியூரில் சனிக்கிழமை பிற்பகல் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெள்ளகவுண்டன்பட்டி நீரேற்று பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சிவசாமி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மணி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி ஏற்புரையாற்றினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் தான்தோன்றி, வாங்கல், உப்பிடமங்கலம் ஆகிய மூன்று நீரேற்று பாசன விவசாயிகள் சங்கங்கள் மூலம் காவிரி நீரை எடுத்து வந்து 1,640 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் மூன்று திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மழை வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் நீா் வீணாக வங்கக்கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும், அந்த உபரிநீரை கரூா் மாவட்டத்தின் கடவூா், தோகைமலை போன்ற வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் நீா் நிரப்பும் வகையில் திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தற்போது திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. திட்ட மதிப்பீடு பணிகள் முடிந்தபின் அரசுக்கு அனுப்பப்பட்டு விரைவில் அப்பணிகளும் தொடங்க உள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன் மற்றும் நுண்நீரேற்று பாசன விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.