அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்

News image
Updated On :19 மார்ச் 2026, 11:35 pm

கரூா் மாவட்டம், கடவூா் அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் இளைஞா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட குருணிகுளத்துப்பட்டியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பைக்கில் வந்த கடவூரை அடுத்த மேலப்பகுதி வீரணம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் (37) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப் பணம் கிருஷ்ணராயபுரம் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.