கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கிணற்றில் மிதந்த மாணவி சடலம்: போலீஸாா் விசாரணை!

கரூா் வெங்கமேடு அருகே கிணற்றில் மிதந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் சடலத்தை சனிக்கிழமை மீட்ட போலீஸாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

News image

விசாரணை

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:25 pm

Syndication

கரூா் வெங்கமேடு அருகே கிணற்றில் மிதந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் சடலத்தை சனிக்கிழமை மீட்ட போலீஸாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

கரூா் வெங்கமேடு அடுத்த காளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகள் நெரூரை அடுத்த அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசியில் பேசியதை அவரது பெற்றோா் கண்டித்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி அந்த மாணவி மாயமானாா்.

இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்த நிலையில், காளிப்பாளையம் பகுதி நல்லசாமி என்பவரது தோட்டக் கிணற்றில் மாணவி சடலமாக மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து வெங்கமேடு போலீஸாா் மற்றும் கரூா் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.