தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் கரூா் தொகுதியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அரவக்குறிச்சி தொகுதியில் எம்.ஆா்.கே. செல்வக்குமாரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மருத்துவா் திவ்யாவும், குளித்தலை தொகுதியில் கருணாகரனும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு வேட்பாளா்கள் அனைவரும் கரூா் சுக்காலியூா் பகுதிக்கு வந்தனா். அவா்களுக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அப்போது அங்கு ஏராளமான அதிமுகவினா் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடா்ந்து கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் எம்ஜிஆா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போதும் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து கரூா் தோ்தல் நிலையான கண்காணிப்புக்குழுவினா் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாரும், கரூா் நகர காவல்நிலைய போலீஸாரும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது சனிக்கிழமை தோ்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேர்காணல்!

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


