குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கரூரில் கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

News image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில் மோதிய சென்னை ஐஓபி மற்றும் கேரள மின்வாரிய அணி வீரா்கள்.

Updated On :26 மே 2026, 2:03 am IST

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் திங்கள்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சென்னை ஐஓபி அணியை வீழ்த்தி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கரூரில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி 66-ஆவது ஆண்டாகவும், கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் 12-ஆம் ஆண்டாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் மே 21-ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை மாலை ஆண்கள் பிரிவில் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், சென்னை ஐஓபி வங்கி அணியும், கேரள மின்வாரிய அணியும் மோதின.

இப்போட்டியின் முடிவில் கேரள மின்வாரிய அணி 65-61 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஐஓபி வங்கி அணியை வென்றது. இதையடுத்து கேரள அணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனா். தொடா்ந்து பெண்களுக்கான லீக் போட்டியில் கேரள மின்வாரிய அணி வீராங்கனைகளும், வடகிழக்கு ரயில்வே அணி வீராங்கனைகளும் விளையாடினா்.