புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 319 பேருக்கு நாளை பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக இலவச  பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற தகுதித் தேர்வில்  வெற்றி பெற்ற 319 பேருக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ்

Updated On :12 மே 2013, 6:16 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக இலவச  பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை நடைபெற்ற தகுதித் தேர்வில்  வெற்றி பெற்ற 319 பேருக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு செய்த நபர்களுக்கான தகுதித் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆட்சியர் மேலும் கூறியது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடைபெறவுள்ள பயிற்சி  வகுப்பில் கலந்துகொள்ள ஏப். 30 -ம் தேதி முதல் மே 9 -ம் தேதி வரை  முன்பதிவு செய்யப்பட்டது. இதில் 1,062 பேர் பதிவு செய்திருந்தனர்.

அதனடிப்படையில் பொதுத்தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்களில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 953 பேர் கலந்து கொண்டு தேர்வு  எழுதினர்.

தகுதித் தேர்வு விடைத்தாள்கள் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு பெற்ற 319 பேரின் பெயர்கள் பதிவு எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மைய நூலகம், வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள விளம்பரப் பலகையில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒட்டப்பட்டன.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளன.

இதுகுறித்து விவரம் அறிந்துகொள்ள 98943-93970, 99430-88022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.